சென்னை: ஆடி மற்றும் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லி ரூ. 1200க்கும், முல்லை ரூ. 700க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு, மதுரை, வேலூர், ஒசூர், சேலம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து தினமும் பூக்கள் வருகின்றன. திருமணம் மற்றும் விசேஷ தினங்களில் பூக்கள் வரத்து அதிகமாக இருக்கும்.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி ரூ. 200க்கும், முல்லை ரூ. 200க்கும், ஜாதி மல்லி ரூ. 300க்கும், கனகாம்பரம் ரூ. 200க்கும், அரளி ரூ. 30க்கும், பன்னீர் ரோஸ் ரூ. 10க்கும் சாக்லெட் ரோஸ் ரூ. 30க்கும், சம்பங்கி ரூ. 30க்கும், சாமந்தி ரூ. 50க்கும் விற்பனை செய்யப்பட்டது.