சென்னை, ஆக .6: தமிழக அரசுத் தேர்வுகள் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: பள்ளி மாணவ, மாணவியர் அறிவியல், கணக்கு, சார்ந்த ஒலிம்பியாட் தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப் போல தமிழ்மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் 2022-23ம் ஆண்டு கல்வி ஆண்டு முதல் தமிழ்மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை வழியாக மாதம் ரூ. 1500 வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும். இந்த தேர்வில் 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்களும், மீதம் உள்ள 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள். தமிழ்நாடு அரசின் 10ம் வகுப்பு தர நிலையில் உள்ள தமிழ்ப் பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடக்கும். அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் இந்த தேர்வு நடத்தப்படும்.