அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கபிலன் (58). இவரது மகன் நெப்போலியன், தன்னிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக அவரது மனைவி அம்பத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, நெப்போலியன், அவரது தந்தை கபிலன், தாய் மீது வழக்குப்பதிவு செய்ய அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்படி இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்தார்.