தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஊத்தங்கரை, ஆக.6: ஊத்தங்கரை பகுதியில் இயங்கி வரும் கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில், வெளி மாநில தொழிலாளர்களை பணியமர்த்தக் கூடாது, தினக்கூலி தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்த முறையில் ஊழியர்களை பணியில் சேர்ப்பதை ரத்து செய்ய வேண்டும் மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எல்பிஎப் தொழிற்சங்க தலைவர் மகாலிங்கம், சிஐடியு தொழிற்சங்க செயலாளர் கோபால், விசிக தொழிற்சங்க செயலாளர் சிவக்குமார், எம்எல்எப் தொழிற்சங்க செயலாளர் மயில்வாகனம் ஆகியோர் உள்பட 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

Related Stories: