வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்ற 6 பேர் கைது

கிருஷ்ணகிரி, ஆக.6:கிருஷ்ணகிரி டவுன் எஸ்ஐ சிவசந்தர் மற்றும் போலீசார், பாப்பாரப்பட்டி சுடுகாடு பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த கிருஷ்ணசாமி தெருவை சேர்ந்த சுதர்சன் (22) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், கிருஷ்ணகிரி தாலுகா எஸ்ஐ ஞானக்கண் ரகுநாதன் மற்றும் போலீசார், பெருமாள் நகரில் உள்ள தாபா ஓட்டலில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு 100 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த காவேரிப்பட்டணம் பனகல்தெருவை சேர்ந்த யாஜா(36) என்பவரை கைது செய்தனர். கலால் இன்ஸ்பெக்டர் கமலேசன் மற்றும் போலீசார், பாஞ்சலிநகர் பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு கஞ்சா விற்ற பெத்ததாளப்பள்ளியை சேர்ந்த தர் என்பவரை கைது செய்தனர். காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார், தென்பெண்ணையாறு பகுதியில் உள்ள மேம்பாலம் அருகே கஞ்சா விற்றுக்கொண்டிருந்த சரத்குமார்(24) என்பவரை கைது செய்தனர். பர்கூர் எஸ்ஐ ரமேஷ் மற்றும் போலீசார், அதே பகுதியில் உள்ள நாகராஜ் என்பவரது வீட்டில் சோதனை நடத்தி, 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, நாகராஜை கைது செய்தனர்.

இதேபோல், போச்சம்பள்ளி அருகில் உள்ள வேலம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக்(21) என்பவர் கஞ்சா வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து, நாகரசம்பட்டி போலீஸ் எஸ்ஐ சந்துரு தலைமையில் போலீசார், அவரை கைது செய்து, கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர். 

Related Stories: