பெரியபாளையம்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே ஆரணி அடுத்த கொள்ளுமேடு கிராம பகுதியை சேர்ந்தவர் சேட்டு (43). கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் காலை இவர் வேலைக்கு சென்றிருந்த நிலையில், இவரது மனைவியும் கூலி வேலைக்கு சென்றுவிட்டார். மீண்டும், வேலை முடிந்து அன்று மாலை 7 மணி அளவில் சேட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்துவர். உள்ளே சென்று பார்த்தபோது.