வீட்டின் பூட்டை உடைத்து 11 சவரன் கொள்ளை; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

பெரியபாளையம்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே ஆரணி அடுத்த கொள்ளுமேடு கிராம பகுதியை சேர்ந்தவர் சேட்டு (43).  கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் காலை இவர் வேலைக்கு சென்றிருந்த நிலையில், இவரது மனைவியும் கூலி வேலைக்கு சென்றுவிட்டார்.  மீண்டும், வேலை முடிந்து அன்று மாலை 7 மணி அளவில் சேட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.   வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்துவர்.  உள்ளே சென்று பார்த்தபோது.

பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 15சவரன் தங்க நகைகள், ரூ. 15ஆயிரம் ரொக்கம், அரை கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை கொள்ளை போனது தெரிய வந்தது. இதுகுறித்து சேட்டு ஆரணி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆரணி துணை ஆய்வாளர் பிரதாப் மற்றும் போலீசார் கைரேகை நிபுணர்களை வரவைத்து, தடயங்களை சேகரித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் பீரோவை சோதனை செய்தபோது  4 சவரன் நகை மட்டும் துணிகளுக்கிடையே வைத்ததால் தப்பியது தெரிய வந்தது. மேலும், இந்த சம்பவத்திற்கு காரணமாக மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக விசாரணை செய்து தேடி வருகின்றனர்.

Related Stories: