சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதியில் இருக்கும் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்திட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருதாக வாரிய மேலாண்மை இயக்குநர் கோவிந்தராவ் கூறியுள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பெரும்பாக்கம் திட்டப்பகுதியில் சுமைத்தாங்கி அறக்கட்டளையின் சார்பில் கல்லூரிகளில் பயிலும் 40 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா நேற்று நடந்தது. அறக்கட்டளையின் நிறுவனர் நிர்வாக அறங்காவலர் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ம.கோவிந்த ராவ் பங்கேற்று முதல் கட்டமாக கல்லூரியில் பயிலும் 40 மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையாக ரூ. 6,55,274 காசோலைகளை வழங்கினார்.