சென்னை: கர்நாடகாவில் இருந்து ஆம்னி பேருந்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 400 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர். கர்நாடகா மாநிலத்தில் இருந்து ஆம்னி பேருந்து மூலம் குட்கா பொருட்கள் சென்னைக்கு கடத்தி வரப்படுவதாக நுங்கம்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நுங்கம்பாக்கம் போலீசார் நட்சத்திர ஓட்டல் ஒன்றின் அருகே நேற்று முன்தினம் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது ஓட்டல் அருகே வந்து நின்ற ஆம்னி பேருந்தில் இருந்து 3 நபர்கள் பார்சல்களை லோடு வாகனத்தில் ஏற்றினர்.