×

பால் வேன் கவிழ்ந்து விபத்து

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே பூச்சி பட்டி என்ற இடத்தில் எடுமலையிலிருந்து பால் ஏற்றிக்கொண்டு ஆண்டிபட்டி சென்ற வேணும், சின்னமனூரில் இருந்து மதுரை நோக்கி சென்ற காரும் மோதிக்கொண்டது. அதில் பால் ஏற்றி வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் தலை குப்புற விழுந்தது. அதில் பால் அனைத்தும் கொட்டி வீணாகின. வேறு யாருக்கும் எந்த சேதமும் இல்லை. இது குறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...