இளம் பெண் தற்கொலை

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கவுண்டிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா (55). இவரது மகள் சரஸ்வதி (30). இவர் கடந்த 11 வருடங்களுக்கு முன் பிரபாகரன் என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் வசித்து வந்த சரஸ்வதி, காரணமே இல்லாமல் அடிக்கடி தனது கணவருடன் சண்டையிடுவாராம். மேலும், கோபித்துக் கொண்டு வீட்டை விட்டும் சென்றுவிடுவாராம். பின்னர் அவரை சமாதானப்படுத்தி அழைத்து வருவார்களாம். இந்நிலையில் நேற்று முன் தினம் காலை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர், சரஸ்வதி ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மல்லிகா அளித்த புகாரின்பேரில் மொடக்குறிச்சி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: