அண்ணாநகர்: சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (56), தச்சர். இவரது மகன் கண்ணன் (18), அண்ணாநகரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். மகள் மதுமிதா (22), திருமணமாகி கணவருடன் வந்து வந்தார். இந்த தம்பதிக்கு 5 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 6 மாதத்துக்கு முன் கண்ணன் சாலை விபத்தில் இறந்தார். இதனால் தம்பியை நினைத்து மதுமிதா மிகுந்த சோகத்தில் இருந்துள்ளார். சரியாக சாப்பிடாமலும் யாருடனும் பேசாமலும் இருந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் திடீரென மதுமிதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.