பெரம்பூர்: ராஜமங்கலம் பூம்புகார் நகர் 65வது வட்டத்தில் குடிநீர்வாரிய உதவி பொறியாளர் அலுவலகம் உள்ளது. இங்கு சர்மான்கான் (36), உதவி பொறியாளராக பணியாற்றுகிறார். வழக்கம்போல் நேற்றுமுன்தினம் இரவு மெட்ரோ வாட்டருக்கு சொந்தமான லாரிகள் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு பணியாளர் பாஸ்கர் வந்தபோது அங்கு நிறுத்தப்பட்டிருந்த 4 லாரிகளில் இருந்தும் பேட்டரிகள் திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ராஜமங்கலம் போலீசில் புகார் கொடுத்தனர்.