திருவள்ளூர்: திருவள்ளூரில் பெரும்பாலான அரசு அலுவலகங்கள், தனியார் மற்றும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் என ஏராளமாக உள்ளன.
அதனால் திருவள்ளூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள், கார், வேன் மற்றும் ஆட்டோ, இரு சக்கர வாகனமும் வந்து செல்லும். இதனால் இந்தப்பகுதி மிகவும் பரபரப்பாகவே காணப்படும். இந்நிலையில் தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து மரக்கட்டைகளை ஏற்றி வந்த லாரி, சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை சி.வி.நாயுடு சாலையில் வந்தது. அங்குள்ள மர குடோனில் கட்டையை இறக்குவதற்காக பின்னோக்கி இயக்கியபோது திடீரென பழுதாகி நெடுஞ்சாலையின் நடுவில் நின்றது. இதனால் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.