சாலைப்புதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை கிலோ ரூ.69க்கு ஏலம்

க.பரமத்தி ஆக.3: சாலைப்புதூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை கிலோவிற்கு ரூ.69க்கு ஏலம் போனதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி ஒன்றியத்தில் 30ஊராட்சிகள் மட்டுமல்லாது கரூர் ஒன்றிய பகுதியான புகழூர், வேலாயுதம்பாளையம், நொய்யல், சேமங்கி, நடையனூர், மறவாபாளையம், தவிட்டுப்பாளையம், திருக்காடுதுறை, உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட ஊர்களில் இரு வெவ்வேறு ஒன்றிய கிராமப்புற பகுதியில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. மேற்கண்ட பகுதிகளில் விளையும் நிலக்கடலையை தங்களது தேவைக்கு எண்ணை எடுக்கின்றனர்.

பிறகு மீதம் உள்ள கடலையை மூட்டைகளாக கட்டி அருகேயுள்ள வெளி மாவட்ட பகுதியில் இயங்கும் கொடுமுடி அருகேயுள்ள சாலைப்புதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு செல்கின்றனர்.

அங்கு நடந்த ஏலத்தில் 240மூட்டை எடைக்காக நடந்த ஏலத்தில் நிலக்கடலை கிலோவிற்கு குறைந்த பட்சமாக ரூ.62க்கும், அதிக பட்சமாக ஒரு கிலோவிற்கு ரூ.69க்கும் ஏலம் போனது. கடந்த வாரத்தை விட கிலோவிற்கு ரூ.1குறைந்து ஏலம் போனதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Related Stories: