க.பரமத்தி ஆக.3: சாலைப்புதூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை கிலோவிற்கு ரூ.69க்கு ஏலம் போனதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி ஒன்றியத்தில் 30ஊராட்சிகள் மட்டுமல்லாது கரூர் ஒன்றிய பகுதியான புகழூர், வேலாயுதம்பாளையம், நொய்யல், சேமங்கி, நடையனூர், மறவாபாளையம், தவிட்டுப்பாளையம், திருக்காடுதுறை, உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட ஊர்களில் இரு வெவ்வேறு ஒன்றிய கிராமப்புற பகுதியில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. மேற்கண்ட பகுதிகளில் விளையும் நிலக்கடலையை தங்களது தேவைக்கு எண்ணை எடுக்கின்றனர்.