கரூர், ஆக. 3: கரூர் மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஒவ்வொரு மாதம் முதல் புதன்கிழமை மற்றும் மூன்றாவது புதன்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த குறைதீர்ப்பு முகாமில், மாவட்ட எஸ்பி, பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று, அதன் மூலம் பொதுமக்களின் குறைகளை உடனடியாக கண்டறிந்து நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.