கரூர், ஆக.2: கரூர் மாநகராட்சி ராமச்சந்திரபுரம், வஉசி தெரு வடக்கு பகுதியில் ஓடும் கழிவுநீர் வடிகால் மீது சிமென்ட் சிலாப் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், தாந்தோணிமலை வஉசி தெரு வடக்கு மற்றும் ராமச்சந்திரபுரம் பகுதியினர் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராமச்சந்திரபுரம், வஉசி தெரு வடக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து தனியார் பஸ்பாடி நிறுவனம் வரை கழிவு நீர் செல்லும் வாய்க்கால் கட்டப்பட்டு மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது.