விழுப்புரம், ஜூலை 29:கள்ளக்குறிச்சி மாவட்டம் பால்ராம்பட்டை சேர்ந்தவர் பெரியசாமி. இவருக்கு, கடந்த 2018ம் ஆண்டில் பூட்டை கிராமத்தை சேர்ந்த 20 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்தனர். அப்போது அந்த பெண்ணிடம் பெரியசாமி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி நெருங்கி பழகியுள்ளார். பின்னர் அந்த பெண் பெரியசாமியின் வீட்டுக்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டதற்கு அவர் மறுத்துவிட்டார். மேலும் அந்த பெண்ணை பெரியசாமி, அவரது தந்தை மாரி, தாய் சந்திரா, உறவினர் காரனூரை சேர்ந்த கருப்புதுரை ஆகியோர் சேர்ந்து திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.