தமிழ் மாநில காங்கிரஸ் கோரிக்கை மனு

கடலூர், ஜூலை 29: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஞானச்சந்திரன் தலைமையில் முன்னாள் எம்பி வெங்கடேசன், முன்னாள் எம்எல்ஏ புரட்சிமணி, மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன், நகர தலைவர் ரகுபதி, மாநில செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம், நிர்வாகிகள் வேல்முருகன், வடலூர் அன்பு, சேகர் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் தற்போது தமிழக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தியுள்ளது. கடந்த 3, 4 வருடமாக கொரோனா கடும் தொற்றால் பாதகிக்கப்பட்டு சிறு தொழில், குறு தொழில்கள் நசிந்து, ஏழை, எளிய நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு கடந்த 6 மாதத்திற்கு முன்தான் வீட்டுவரி, சொத்துவரியை உயர்த்தியது. ஆட்சி பொறுப்பு ஏற்று ஒரு ஆண்டு நிறைவு செய்த திமுக அரசு ஏழை, எளிய மக்களை பாதிக்கின்ற அறிவிப்பை உடனே திரும்ப பெற வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளர்.

Related Stories: