×

7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் முதியவருக்கு 20 ஆண்டு சிறை


கடலூர், ஜூலை 28: 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள எழுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் மணி (65). இவர் கடந்த 13.2.2021ல் தனது பேத்தியுடன், வீட்டிற்கு விளையாட வந்த 7 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் பெற்றோர், விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மணியை கைது செய்தனர்.மேலும் கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், சாட்சிகள் விசாரணை முடிவடைந்து, நேற்று நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், மணி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3000 அபராதமும் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கடலூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், தமிழக அரசின் ஏதாவது ஒரு திட்டத்தில் இருந்து ரூ.5 லட்சத்தை 30 நாட்களுக்குள் வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கலா செல்வி ஆஜராகி வாதாடினார்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை