திருவள்ளூர்: நடந்து முடிந்த 2021-22 கல்வி ஆண்டில் பிளஸ் 1 தேர்வில் 91.06 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் 2021-22 கல்வி ஆண்டில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் திருவள்ளூர் வருவாய் மாவட்ட அளவில் பொன்னேரி, திருவள்ளூர், அம்பத்தூர், ஆவடி, திருத்தணி ஆகிய 5 கல்வி மாவட்டங்களில் மொத்தமுள்ள 372 பள்ளிகளை உள்ளடக்கிய 138 தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 21 ஆயிரத்து 52 மாணவர்களும், 21 ஆயிரத்து 904 மாணவிகளும் என மொத்தம் 42 ஆயிரத்து 956 பேர் தேர்வு எழுதினர்.