உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு சத்து மாத்திரை சாப்பிட்ட 30 மாணவ, மாணவிகள் மயக்கம்

உளுந்தூர்பேட்டை,  ஜூன் 25: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பாலி  புதுக்காலனி கிராமம். இங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில்  பயிலும் 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஆசனூர் ஆரம்ப சுகாதார  நிலையத்தின் மூலம் செவிலியர்கள் சத்து மாத்திரை வழங்கி உள்ளனர். இதனை  சாப்பிட்ட 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திடீரென வயிற்றுவலி ஏற்பட்டு  மயக்கம் அடைந்ததால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.  உடனடியாக பெற்றோர்  பள்ளிக்கு சென்று தங்களது பிள்ளைகளை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்  மயக்கமடைந்ததால்,  கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே மருத்துவர்கள் மற்றும் சுகாதார குழுவினர் இந்த சத்து  மாத்திரையால் பயப்பட தேவையில்லை என கூறி போதிய சிகிச்சை அளித்தனர். தகவல் அறிந்ததும் அரசு மருத்துவமனைக்கு வந்த மாவட்ட கல்வி அலுவலர்  கலைச்செல்வன் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள், டிஎஸ்பி மகேஷ்,  இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் உள்ளிட்ட போலீசார் சம்பவம் குறித்து விசாரணை  செய்தனர். இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பினை  ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: