விருதுநகர், ஜூன் 25: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் திருமலை தலைமையில், சிஐடியு மாவட்ட நிர்வாகி தேவா, பாலசுப்பிரமணியன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், ‘ஊராட்சி மன்றங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். உள்ளாட்சிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊராட்சி தொழிலாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும்.