மொபட் மீது பஸ் மோதி வாலிபர் பலி

பாலக்காடு, ஜூன் 25: பாலக்காடு - மலம்புழா சாலையில் மொபட் மீது தனியார் பஸ் மோதியதில் வாலிபர் பலியானார். பாலக்காடு - மலம்புழா சாலையில் சாஸ்தா நகர் ஹவுசிங் காலனியைச் சேர்ந்தவர் முகமது அலி. இவரது மகன் நிஷாத் (35). இவர், ஆண்டிமடம் பகுதியில் டீ கடை நடத்தி வந்தார். இவரது கடையில் காஸ் சிலிண்டர் தீர்ந்து விட்டதால் இவரும், இவரது தந்தை முகமது அலியும் மொபட்டில் காஸ் சிலிண்டர் எடுப்பதற்காக மலம்புழாவிலுள்ள வீட்டிற்கு புறப்பட்டனர்.

ரயில் நகர் வளைவு பகுதியில் சென்ற போது மலம்புழாவில் இருந்து பாலக்காட்டிற்கு வந்த தனியார் மொபட் மீது மோதியது. இதில் தந்தை, மகனும் பலத்த காயமடைந்தனர். ஊர் மக்கள் இருவரையும் மீட்டு பாலக்காடு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், செல்லும் வழியிலேயே நிஷாத் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பாலக்காடு ஹேமாம்பிகா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: