கோவை, ஜூன் 25: கோவை கணபதி கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் அழகிரிசாமி (70). இவர், உயர் ரத்த அழுத்த நோயால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால், ஏற்பட்ட மன உளைச்சலில் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர், சம்பவத்தன்று இரவு வீட்டில் விஷம் குடித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக, சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.