கோவை, ஜூன் 25: கோவையில் கோஷ்டி மோதலில் தனியார் ஊழியரை கத்தியால் குத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கோவை ஆர்.எஸ்.புரம் காந்திபார்க் எம்என்ஜி தெருவை சேர்ந்தவர் அஸ்வின்(19). இவர், சாயிபாபா காலனியில் உள்ள மார்க்கெட்டிங் ஏஜென்சியில் சூபர்வைசராக பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் ஹரி(20). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சில வாலிபர்களுக்கும் தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் ஏற்பட்ட பிரச்னையில் ஹரியை வாலிபர்கள் சிலர் தாக்கினர். இது தொடர்பாக ஹரி தனது நண்பர் அஸ்வினிடம் தெரிவித்தார். இதனையடுத்து அஸ்வின் தனது நண்பர்கள் பிரகாஷ், சந்தோஷ் ஆகியோருடன் சென்று ஹரியை தாக்கிய நபர்களை கண்டித்தார். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஆத்திரமடைந்த 3 பேர் கொண்ட கும்பல் தகாத வார்த்தைகளால் பேசி அஸ்வின் மற்றும் அவரது நண்பர்களை சரமாரியாக தாக்கினர். கத்தியால் குத்தியதில், அஸ்வின், பிரகாஷ், சந்தோசுக்கு காயம் ஏற்பட்டது.