திருச்சி, ஜூன் 25: திருச்சியில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் படம் அகற்றப்பட்டதோடு கிழிக்கப்பட்டது. இது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே பனிப்போர் நடந்து வருகிறது. சென்னை வானகரத்தில் நடந்த பொதுக்குழுவில் மேடையில் அவமதிக்கப்பட்டதால், அங்கிருந்து ஓபிஎஸ் வெளிநடப்பு செய்தார்.