திருவாரூர், ஜூன் 25: ஊராட்சிகளுக்கு உரிய நிதி வழங்கக்கோரி ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சிகளுக்கு மாநில நிதிக்குழு மூலம் விடுவிக்கப்படும் மாதாந்திர நிதியினை உடனடியாக வழங்கிட வேண்டும், ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் ஊராட்சி செயலர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு ஊதிய கணக்கில் நிதி இல்லாததால் கடந்த 5 மாதமாக ஊதியம் வழங்கப்படாமல் இருந்துவரும் நிலையில் ஊராட்சி கணக்கு எண் 2 லிருந்து நிதி மாற்றம் செய்து கொள்ள அனுமதி வழங்கிட வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஊழியர்களுக்கு முழு அளவில் ஊதியம் வழங்கிட வேண்டும்,