திருவாரூர், ஜூன் 25: திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு தமிழக அரசின் விருதுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரதினவிழா அன்று மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்த சமூக பணியாளர் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி நடைபெறும் சுதந்திரதின விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்த சமூக பணியாளர்,