தஞ்சாவூர் மாவட்டத்தில் எஸ்ஐ பணிக்கான எழுத்து தேர்வு

தஞ்சாவூர், ஜூன்25: தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெறுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 2022ம் ஆண்டிற்கான சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்விற்கு இருபாலரிலும் 5,086 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான மெயின் எழுத்து தேர்வு இன்று(25ம் தேதி) காலை 10 மணி முதல் 12:30 மணி வரையிலும், தமிழ் தகுதித்தேர்வு மதியம் 3:30 முதல் மாலை 5:10 வரையிலும் நடக்கிறது.

இத்தேர்வுகள் தஞ்சாவூர்  திருச்சி சாலையில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைகழகத்திலும், குந்தவை நாச்சியார் அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியிலும், பெரியார் மணியம்மை கல்லுாரியிலும், பொன்னையா ராமானுஜம் பல்கலைக்கழகத்திலும் நடைபெறுகிறது. இதே போல, நாளை (26ம் தேதி), பணியில் உள்ள போலீசார் பதவி உயர்வுக்காக தேர்வு எழுத விண்ணபித்துள்ள 672 பேருக்குமான தேர்வு குந்தவை நாச்சியார் அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடைபெறுகிறது. இத்தேர்வையொட்டி 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: