பாபநாசம், ஜூன்25: பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாபநாசம் நீதித்துறை நடுவர் அப்துல்கனி ஊக்கத்தொகை மற்றும் திருக்குறள் புத்தகங்களை வழங்கி பாராட்டி பேசினார். பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 7 மாணவ மாணவிகளுக்கு, ஊக்கத்தொகை வழங்கும் விழா நடந்தது. அனைவரையும் பள்ளி தலைமையாசிரியர் நீலாதேவி வரவேற்றார்.