அறந்தாங்கியில் பலத்த மழை

அறந்தாங்கி, ஜூன் 25: அறந்தாங்கியில் நேற்று மாலை திடீரென்று பலத்த மழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அறந்தாங்கியில் பகல் நேரத்தில் கடும் வெப்ப நிலை நிலவுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக மாலை நேரங்களில் மழை லேசானது முதல் பலத்த மழை வரை பெய்து வருகிறது. இதேப்போல நேற்று மாலை அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியது. மழையின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: