தூத்துக்குடி, ஜூன் 25: ஏரல் பேரூராட்சி 4வது வார்டு கவுன்சிலர் உள்பட அமமுகவினர், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் கோட்டாளம் ஏற்பாட்டில் ஏரல் பேரூராட்சி 4வது வார்டு அமமுக கவுன்சிலர் பெரியசாமி என்ற ஆனந்த் மற்றும் ஏரலை சேர்ந்த அமமுக நிர்வாகிகள் விக்னேஷ், சுரேஷ்குமார், சுரேஷ் முருகன், சதீஷ், மணிகண்டன், ராதாகிருஷ்ணன், மாரியப்பன், அற்புதராஜ் உள்ளிட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.