பெருங்குளத்தில் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம்

ஏரல், ஜூன் 25:  பெருங்குளம் பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவி புவனேஸ்வரி சண்முகநாதன் தலைமை வகித்து பேசினார். செயல் அலுவலர் சந்திரசேகரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பிரதிநிதி அனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விஏஓ அனிதா, ஏரல் போலீஸ் எஸ்ஐ மணி, பேரூராட்சி கவுன்சிலர்கள் பாஸ்கர், காமராஜ், சுப்பிரமணியன், மாயன், பொன்செல்வராஜ், செல்வகுமாரி, சண்முகத்தாய், வத்ஸலா, சவுந்தர்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: