சாத்தான்குளம், ஜூன் 25: வரிப்பிலான்குளத்தில் பயணியர் நிழற்குடை கட்ட ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார். சாத்தான்குளம் யூனியன் கொம்பன்குளம் பஞ்சாயத்திற்குட்பட்ட வரிப்பிலான்குளத்தில், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடை கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. யூனியன் சேர்மன் ஜெயபதி தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையாளர் ராணி, வடக்கு வட்டார காங். தலைவர் பார்த்தசாரதி, சாலை பாதுகாப்பு நுகர்வோர் குழு உறுப்பினர் போனிபாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிடிஓ ராஜேஷ்குமார் வரவேற்றார்.