திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் மின் கட்டணம் கட்ட சென்றவர் உடல் நலக் குறைவால் மயங்கி விழுந்தவர் உயிரிழந்தார். கடம்பத்துார் ஒன்றியம் விஸ்வநாதபுரம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி(42). இவருக்கு நிர்மலா(38) என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். வெல்டரான முனுசாமி சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மின்சார வாரிய அலுவலகத்தில் கரண்ட் பில் கட்ட சென்றுள்ளார்.