புதுச்சேரி, ஜூன் 14: புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய, மாநில அரசுகளின் முடிவை கண்டித்து மின்துறையினர் தொடர் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். மின்விநியோகம் பாதிக்காத வகையில் அதேவேளையில் அலுவலக பணிகள் முடங்கும் வகையில் ஒவ்வொரு மண்டலம் வாரியாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது உண்ணாவிரத போராட்டம் நேற்று 4ம் நாளாக தொடர்ந்து நடைபெற்றது. மண்டலம்-4 பிரிவில் (வில்லியனூர், பூமியான்பேட்டை, ராமநாதபுரம், திருக்கனூர், சேதராப்பட்டு, காலாப்பட்டு) பணிபுரியும் ஊழியர்கள் தங்களது பணிகளை புறக்கணித்து அங்கு உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அங்கு மின் கட்டணம் அளவீடு, வசூல், பரா
மரிப்பு பணிகள் பாதித்தன. பொதுச்செயலாளர் வேல்முருகன் தலைமையில் நடந்த போராட்டத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகள், ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.