ஒகேனக்கல் காவிரியில் ஆண் சடலம் மீட்பு

தர்மபுரி, ஜூன் 14: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மணல்திட்டு ஜீகல் என்ற பகுதியில், நேற்று சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. இதுகுறித்த தகவலறிந்த ஒகேனக்கல் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு, பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து 2 நாட்கள் ஆகி இருக்கும் என்பதால், உடல் அழுகிய நிலையில் இருந்தது. இடது கையில் மோதிரம் அணிந்திருந்தார். மேலும், வலது கால் தொடையில் முதலை கடித்தது போல் சிதைந்து காணப்பட்டது. அவர் யார்?, ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி இறந்தாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: