குறைதீர் கூட்டத்தில் 289 மனுக்கள் குவிந்தன

தஞ்சாவூர், ஜூன் 14: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று வருவாய் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 280 மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 280 மனுக்கள் அளிக்கப்பட்டது. பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வருவாய் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா அறிவுரை வழங்கினார். மேலும் மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் காந்த் (வளர்ச்சி), சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை கலெக்டர் சாலை தவவளவன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: