தஞ்சாவூர், ஜூன்14: தஞ்சாவூர் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தின் கீழ் 3 பேர் சிறையிலடைக்கப்பட்டனர். திருவிடைமருதூர் வட்டம் திருலோகி கூத்தனூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் ஜீவன்ராஜ்(29). இவர் மீது பாலியல் உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. பாபநாசம் அருகே சக்கராப்பள்ளி புரங்காடு தோப்பு தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் ராஜ்குமார்(32). பாலியல் குற்றவாளியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. பாபநாசம் அருகே அய்யம்பேட்டை பட்டுசாலியத் தெருவைச் சேர்ந்தவர் வெள்ளையன். இவரது மகன் சூர்யா(26). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.