குண்டர் சட்டத்தின் கீழ் 3 பேர் சிறையிலடைப்பு

தஞ்சாவூர், ஜூன்14: தஞ்சாவூர் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தின் கீழ் 3 பேர் சிறையிலடைக்கப்பட்டனர். திருவிடைமருதூர் வட்டம் திருலோகி கூத்தனூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் ஜீவன்ராஜ்(29). இவர் மீது பாலியல் உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. பாபநாசம் அருகே சக்கராப்பள்ளி புரங்காடு தோப்பு தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் ராஜ்குமார்(32). பாலியல் குற்றவாளியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. பாபநாசம் அருகே அய்யம்பேட்டை பட்டுசாலியத் தெருவைச் சேர்ந்தவர் வெள்ளையன். இவரது மகன் சூர்யா(26). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

இதையடுத்து எஸ்.பி.,ரவளிப்ரியா காந்தபுனேனி பரிந்துரையின் பேரில் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) சுகந்தி, பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அழகம்மாள்(பொ), அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் வனிதா ஆகியோர் தாக்கல் செய்த ஆணையுறுதி ஆவணங்களின் அடிப்படையில் ஜீவன்ராஜ், ராஜ்குமார், சூர்யா ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் சட்டத்தின் கீழ் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: