ஜெகதாப்பட்டினம் அருகே மணல் கடத்திய மினிலாரி பறிமுதல்

அறந்தாங்கி, ஜூன் 14: ஜெகதாப்பட்டினம் அருகே மணல் கடத்திய மினிலாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஜெகதாப்பட்டினத்தை அடுத்த வடக்கு மஞ்சக்குடி பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு அனுமதி பெறாமல் மணல் ஏற்றி வந்த கானாடு முருகேசன் என்பவருக்கு சொந்தமான மினிலாரியை அரை யூனிட் மணலுடன் பறிமுதல் செய்து முருகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதுபோல், கோட்டைப்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் கார்க்கமங்கலம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே நாட்டாணியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் அனுமதி பெறாமல் மணல் ஏற்றி வந்த மாட்டுவண்டியை கால்யூனிட் மணலுடன் பறிமுதல் செய்து, ஜெயக்குமாரை கைது செய்தார்.

Related Stories: