கோயில் கும்பாபிஷேகம்

வருசநாடு, ஜூன் 14: கடமலை-மயிலை ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்டமனூர் அருகே, வேலாயுதபுரம் என்னும் கிராமத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் எல்லக்கோவில் உள்ளது. இந்த கோயில் நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது, இந்த விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். இதனை தொடர்ந்து யாகபூஜை, யாக வேலி, விநாயகர் ஹோமம், தீபாராதனை, தீர்த்தம் தெளித்தல், சர்க்கரைப் பொங்கல் வைத்து வழிபாடு செய்தல் அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Related Stories: