குட்கா பறிமுதல்: 2 பேர் கைது

நத்தம், ஜூன் 14: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கொட்டாம்பட்டி செல்லும் சாலையில் சமுத்திராப்பட்டி போலீஸ் சோதனைச்சாவடியில், நத்தம் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜோதிமணி மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது டூவீலர் ஒன்றை பிடித்து விசாரணை செய்தனர். அதில் வந்தவர்கள் மதுரை மாவட்டம், பள்ளபட்டியைச் சேர்ந்த உதுமான் (31), பிரான்மலையைச் சேர்ந்த சூர்யா (27) என்பதும் அவர்கள் டூவீலரில் 7.900 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருப்பது கண்டறியப்பட்டது. அவர்களிடமிருந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: