ரயிலில் அடிபட்டு மனநலம் பாதித்தவர் பலி

நிலக்கோட்டை, ஜூன் 14: நிலக்கோட்டை அருகே உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்தவர் (49). இவர், கொடைரோடு ரயில் நிலையம் அருகே, ஜெகநாதபுரம் கேட் வழியாக தண்டவாளத்தை கடந்து அம்மாபட்டிக்கு செல்ல முயன்றார். அப்போது சென்னையிலிருந்து மதுரை சென்ற பாண்டியன் அதிவிரைவு ரயிலில்,  அவர் மீது மோதியது. இதில் உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே இறந்தார். இவர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.கொடைரோடு ரயில்வே காவல்துறை சார்பு ஆய்வாளர் மகேஸ்வரன் மற்றும் மணிவண்ணகுமார் அடங்கிய காவல்துறையினர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: