அதிகாரிகள் சமரசம் தேவராயன்பேட்ைட சக்தி விநாயகர் கோயில் காவடி திருவிழா

பாபநாசம்.,ஜூன்11: தேவராயன்பேட்டை  சக்தி விநாயகர் கோயிலில் நடைபெற்ற பால்குடம் கரகம் காவடி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பாபநாசம் தாலுகா, தேவராயன் பேட்டை அம்பலகாரதெருவில் அமைந்துள்ள சக்தி விநாயகர் கோயில் பால்குடம், கரகம், காவடி திருவிழா நடைபெற்றது. கரகம் காவடி எடுப்பதை முன்னிட்டு சோலை பூஞ்சேரி அருகே உள்ள பொய்கை ஆற்றங்கரையில் பக்தர்கள் பால்குடம், கரகம், காவடி எடுத்து மேளதாளம், வாண வேடிக்கையுடன் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினர். பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Stories: