மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் போராட்டம்

கந்தர்வகோட்டை, ஜூன் 11: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் தலித் சமுதாய மக்களை இழிவுபடுத்தி பேசிய பாஜ கட்சி மாநில தலைவர் அண்ணாமலையை கைது செய்யக்கோரி தாலுகா செயலாளர் அருண்குமார் தலைமையில் மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் கசி.விடுதலைக்குமரன் தலித் மக்களை தரக்குறைவாக பேசிய பாஜ கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை எஸ்சி, எஸ்.டி சட்டப்படி உடனே கைது செய்ய வேண்டும் என்றார். இதில் மாவட்ட செயலாளர் முத்துலட்சுமி, மையக்குழு உறுப்பினர் ராஜா, திருச்சி மாவட்ட அமைப்பாளர் வீரக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: