குடும்பத்தகராறில் டெய்லர் தற்கொலை

திருச்சி, ஜூன் 11: திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அண்ணா தெருவை சேர்ந்தவர் சிவசங்கர்(36), டெய்லர். இவர் கடந்த ஓராண்டாக சரிவர வேலைக்கு செல்லவில்லை. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மனவேதனையில் இருந்த வந்த சிவசங்கர் நேற்று முன்தினம், வீட்டில் யாரும் இல்லாத நேரம் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த கன்டோன்மென்ட் போலீசார் அங்கு சென்று சிவசங்கர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்

Related Stories: