கிருஷ்ணராயபுரம் அருகே கார் மீது பைக் மோதி ஒருவர் படுகாயம்

கிருஷ்ணராயபுரம், ஜூன் 11: கிருஷ்ணராயபுரம் யூனியன் ஆபீஸ் அருகே கார் மீது பைக் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.கடையநல்லூரை சேர்ந்த முகமது காலித் மகன் அப்துல் பாசித். இவர் நேற்று காலை திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி நோக்கி காரில் கிருஷ்ணராயபுரம் யூனியன் ஆபீஸ் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த ராமநாதன் மகன் சரவணன் என்பவர் ஓட்டி வந்த பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த சரவணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அப்துல் பாசித் அளித்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Related Stories: