பைக் மோதி முதியவர் சாவு

குளத்தூர், ஜூன் 11: வேப்பலோடை கிழக்கு கடற்கரை சாலையில் பைக் மோதி முதியவர் உயிரிழந்தார்.வேப்பலோடை தெற்குபாண்டியாபுரத்தை சேர்ந்தவர் கோவில்ராஜ்(67) இவர் மொபைல் ரீஜார்ச் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் காலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உணவகத்தில் இட்லி வாங்குவதற்காக சாலையில் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கமுதி பெருநாழியை சேர்ந்த சபாபதி மகன் வேல்முருகன் என்ற பொன்வேல்(37) என்பவர் ஓட்டிவந்த பைக் எதிர்பாராதவிதமாக கோவில்ராஜ் மீது மோதியது. இதில் கோவில்ராஜ் பலத்த காயமடைந்தநிலையில் அப்பகுதியினர் அவரை மீட்டு 108ஆம்புலன்ஸ் மூலமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தருவைக்குளம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: