தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் அமைப்பு தேர்தல் ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ முன்னிலையில் நடந்தது

ஏரல், ஜூன் 11: ஏரலில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அமைப்பு தேர்தல் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ முன்னிலையில் நடந்தது.தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அமைப்பு தேர்தல் வட்டார, மாவட்ட பிரதிநிதி தேர்தல் ஏரல் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ முன்னிலையில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட தேர்தல் அதிகாரி வல்சலன் கலந்து கொண்டு தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் விருப்ப மனு வாங்கினார். நிகழ்ச்சியில் மாநில செயலாளர் ஷாஜகான், மாநில மகளிரணி அன்புராணி, மாவட்ட மகளிரணி ராணி, தெற்கு மாவட்ட துணைத்தலைவர் சங்கர், பொருளாளர் எடிசன், மீனவரணி மாவட்ட தலைவர் சுரேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன், மாவட்ட பொதுச்செயலாளர் சிவகளை பிச்சையா,  இளைஞரணி தலைவர் இசைசங்கர், முன்னாள் இளைஞரணி தலைவர் ஜெயசீலன்துரை, மாநில ஊடக பிரிவு தலைவர் முத்துமணி, வை ஊடக பிரிவு மரியராஜ், வட்டார செயலாளர்கள் தாசன், நல்லகண்ணு, பூங்கன், சற்குரு, லூர்துமணி, பார்த்தசாரதி, சக்திவேல், வை. யூனியன் கவுன்சிலர் பாரத், வட்டார துணைத் தலைவர் மீனா மற்றும் நிர்வாகிகள் உமரிக்காடு பாஸ்கர், ஏரல் அய்யம்பெருமாள், சண்முகசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: