கம்பன் விழாதிருச்செங்கோடு, ஜூன் 11: திருச்செங்கோட்டில் 41ம் ஆண்டு கம்பன் விழா நிகழ்ச்சி கைலாசநாதர் கோயில் சொக்கப்ப முதலியார் அரங்கில் நடந்தது. முதல் நாள் நிகழ்ச்சியாக சுழலும் சொல்லரங்கம் நடந்தது. வித்யா விகாஸ் கல்வி நிறுவனங்களின் மேலாண் இயக்குனர் ராமலிங்கம் தலைமை வகித்து துவக்கி வைத்தார். கம்பன் கழக செயலாளர் செங்கோட்டுவேல் வரவேற்றார். தேசிய சிந்தனை பேரவை நிறுவனர் திருநாவுக்கரசு வாழ்த்தி பேசினார். சண்முகவடிவேல் நடுவராக இருந்து பேசினார்.